சர்வதேச யோகா தின விழா

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி வாழ்த்தினர். மாணவர்கள் பிராணாயனம், சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்தனர். பயிற்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், உடற்பயிற்சி துறை பேராசிரியர் சுந்தரமூர்த்தி செய்தனர்.

* சிவகாசி மாரனேரி கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆயுஷ் மருத்துவர் ஹரிணி மாணவர்களுக்கு யோகா குறித்து விளக்கி பயிற்சி அளித்தார். மாணவர்கள் இந்த ஆண்டு யோகா முத்திரை வடிவத்தில் யோகாசனம் செய்தனர்.

Advertisement