100 ஏரிகள் புனரமைப்பு; கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி ஒதுக்கீடு

சென்னை : கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், 100 ஏரிகளை புனரமைக்க, 111 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு, பிரதமரின் கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களில் உள்ள நீர்நிலைகளை செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டம் ஆர்.ஆர்.ஆர்., என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதியை, மத்திய அரசு 60, மாநில அரசு 40 சதவீதம் பகிர்ந்து கொள்கின்றன.
நீர் நிலைகளின் நீர்பிடிப்பு பகுதிகளை பாதுகாத்தல், அதன் பாசன பகுதிகளை மேம்படுத்துதல், கொள்ளளவை அதிகரித்தல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், வேளாண் தேவைக்கான குடிநீர் இருப்பை உறுதி செய்தல், இத்திட்டத்தின் நோக்கமாகும். ஒன்பது கட்டடங்களாக, 498 கோடி ரூபாய் மதிப்பில், 480 ஏரிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் 100 ஏரிகளை புனரமைக்க, 111 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கி உள்ளது. இந்நிதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 11 ஏரிகள், வறட்சியான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், 89 ஏரிகள் புனரமைக்கப்பட உள்ளன. இதற்கான அரசாணையை நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ளார்.

மேலும்
-
வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை