குண்டும் குழியுமாக உள்ள ரோடு
சிவகங்கை : சிவகங்கை மேம்பாலத்தில் இருந்து ஆயுதப்படை குடியிருப்பு வரை செல்லக்கூடிய ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை அருகே முத்து நகர், ஆயுதப்படை குடியிருப்பு, போக்குவரத்து நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். போக்குவரத்து நகர், முத்து நகரில் இருந்து சிவகங்கை செல்வதற்கு ஆயுதப்படை குடியிருப்பு வழியாக செல்லக்கூடிய ரோடு முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்த ரோட்டை பயன்படுத்தி தான் ஞாயிற்றுக்கிழமை சந்தை, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் சென்று வருகின்றனர். அண்ணாமலை நகர், புதுப்பட்டி, ஏனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிவகங்கையில் உள்ள பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் தினமும் சைக்கிளில் இந்த ரோட்டை தான் பயன்படுத்துகின்றனர். இந்த ரோடு முற்றிலும் குண்டும் குழியுமாக இருப்பதால், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
///////
மேலும்
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்