பா.ஜ., அலுவலகத்தில்  சர்வதேச யோகா தினம் 

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார்.

கூட்டத்தில் யோகாவின் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. பின்னர் நடந்த யோகாசன பயிற்சிக்கு முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை வகித்தார். தொண்டர்கள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். இதில் மாவட்டத்தலைவர் முரளீதரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வழக்கறிஞர் சண்முகநாதன், ஜி.குமார். முன்னாள் கயிறு வாரிய தலைவர் குப்புராமு, முன்னாள் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன், மாவட்ட துணைத்தலைவர் முத்துச்சாமி, மாநில பொறுப்பாளர் சவுந்திரபாண்டியன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் குமரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வக்கீல் சண்முகநாதன் செய்திருந்தார்.

Advertisement