மணல் கடத்தல் வழக்கு தி.மு.க., நிர்வாகி கைது
கண்டவராயன்பட்டி : திருப்புத்தூர் அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக தி.மு.க., விவசாய அணி துணை அமைப்பாளர் உட்பட 2 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்புத்துார் அருகே பாலாறு செல்லும் மாங்குடி பகுதியில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் எடுத்து கடத்துவதாக போலீசாருக்கு புகார் சென்றது. போலீசார் அங்கு ரோந்து சென்று, மண் அள்ளும் இயந்திரம் மூலம் லாரியில் மணல் கடத்திய தி.மு.க., விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன் 55, திருக்களாப்பட்டி சந்தோஷ் 22, ஆகிய இருவரையும் கைது செய்து, மண் அள்ளும் இயந்திரம், லாரியை கண்டவராயன்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.
///
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
Advertisement
Advertisement