ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

''அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்... அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்''

கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, காய்கறிகளுடன் சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

''முருகன் மாநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்களாக்கா... இங்க எனக்கு காய்கறி வாங்கிட்டு வர்றதுக்குள்ளயே நாக்கு தள்ளுது... யாராவது ெஹல்ப் பண்ணுனா பரவால்லக்கா''

''மித்து... ஆதங்கம் புரியுது... நாம என்ன, சிட்டில புதுசா வந்த பெண் அதிகாரியா... அவங்களுக்கு கூடுதலா தலைமைப்பொறுப்பும் கொடுத்திருக்காங்க...

''வீட்டுக்கு காய்கறி, மளிகை எல்லாம் வாங்கிக்கொடுக்குற பொறுப்பு, சுழற்சி முறையில சில அலுவலர்களுக்கு கொடுத்திருந்தாங்களாம்.

''கடந்த வாரம், அவங்க அலுவல் ரீதியா பேசுன ஆடியோ வெளியே கசிஞ்சு, வேறுவிதமா சமூக வலைதளங்கள்ல பரவிடுச்சு... அட்ராசிட்டியா அவங்க நடந்துக்கிறாங்கன்னு ஊழியர்கள் மத்தியில பேசிக்கிறாங்க...

''ஆபீஸ் பைல் 'பாஸ்' பண்றதில 'எல்லாமே' சரியா இருக்கணும்ன்னு 'கறார்' காட்டறாங்களாம். இதனால வெறுத்துப்போன ஆபீசர்ஸ் யாரோ ஒருத்தர்தான் ஆடியோவை கசிய விட்ருக்காங்கன்னு சொல்லிக்கிறாங்க...''

வில்லங்கத்தைச் சொன்னாள் சித்ரா.

அவர் ஏதும் அறியாரடிஞானத் தங்கமே



''சித்ராக்கா... தாராபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளரா துரைசாமிங்கறவரை நியமிச்சிருக்காங்க... மாம்பாடி, அலங்கியம், மணக்கடவுன்னு சில ஊராட்சிகள்ல கட்சியினர் மத்தியில் இவரோட நியமனத்துக்கு எதிர்ப்பு எழுந்திருக்காம்.

''பெரமியம் பகுதிக்கு மினிஸ்டர் கயல்விழி வந்தப்ப, துரைசாமியோட அதிருப்தியாளர்கள் காரை முற்றுகையிட்டு வாக்குவாதம் பண்ணுனாங்களாம்... மினிஸ்டர் திகைச்சு போயிட்டாங்களாம். உங்களோட கருத்தை கட்சி மேலிடத்துக்குச் சொல்றேன்னு மினிஸ்டர் சமாதானம் பண்ணுனாராம்''

''மித்து... சில நாள் முன்னாடி பெரமியம் ஊராட்சில வளர்ச்சிப்பணிகள் துவக்க விழா நடந்துச்சுல்ல... இதுக்காக வைக்கப்பட்ட பேனர்ல கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி படங்கள் 'மிஸ்சிங்'காம். விழாவுல பங்கேற்ற மினிஸ்டர் கயல்விழி, தி.மு.க., மாவட்டச் செயலாளர் பத்மநாபனும், இதையெல்லாம் கண்டுக்கலையாம்.

''இதை ஏன் சொல்றேன்னா, போன மாசம் இதேபோல தாராபுரத்தில் நடந்த திட்டப்பணிகள் துவக்க விழாவுல, முதல்வர் உள்ளிட்ட யாரோட படமும் இடம் பெறலையாம். இதனாலேயே மினிஸ்டர் கயல்விழி உள்ளிட்டோரோட வருகை தாமதமாச்சு... அவசர அவசரமாக ஒரு பேனர்ல மட்டும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி படங்களை அச்சிட்டு கொண்டுவந்தாங்க... போன மாதம் அந்தளவு 'ரிஸ்க்' எடுத்தவுங்க, பெரமியத்துல நடந்த விழாவுல இதைப் பத்தியெல்லாம் கண்டுக்காம விட்டுட்டாங்க''

சம்பவத்தை விளக்கினாள் சித்ரா.

நாலும் நடந்து முடிந்த பின்னால்நல்லது கெட்டது தெரிந்ததடா...



'சித்ராக்கா... ஹெச்.எம்.,கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஆபீஸ்ல நடந்துச்சு... கூட்டம் நடக்குறதுக்கு முன்னாடி பொறுப்பு சி.இ.ஓ.,வா இருக்குற காளிமுத்து, கலெக்டர சந்திச்சிருக்காரு. பத்தாம் வகுப்பு தேர்வுல, ரேங்க் குறைச்சிருச்சுன்னு கலெக்டர் வருத்தப்பட்டு சொல்லியிருக்காரு...

''சூட்டோட சூடா கூட்டத்துக்கு வந்த சி.இ.ஓ., குறைஞ்ச எண்ணிக்கைல ஸ்டூடன்ட்ஸ் இருந்தும் பெர்சன்டேஜ் குறைஞ்ச ஸ்கூல் ெஹச்.எம்.,களை 'பிடி' 'பிடி'ன்னு பிடிச்சிட்டாராம்.

''கூடுதல் ஆசிரியர் வேணும்ன்னு கேட்டு வாங்கறீங்க... பெர்சன்டேஜ் மட்டும் ஏன் குறையுது... படிக்கிறது பத்து பேரு; பாடம் எடுக்குறது மூனு பேர்; ஆனா, ஏழு பேர்தான் பாஸ்; மூனு பேர் பெயில்... இப்படி இருந்தா எப்படின்னு ஒரே போடா போட்டாராம்.

''ஆனா, சி.இ.ஓ.,வோட ஆட்டிடியூடை, ெஹச்.எம்.,கள் ரசிக்கலேங்கறது க்ளியரா தெரிஞ்சுது''

''மித்து.. தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலரா இருந்த தேவராஜனை சஸ்பெண்ட் பண்ணீட்டாங்க... தனியார் பள்ளி ஒன்னுல ஏற்பட்ட பஞ்சாயத்துக்கு பிறகு அதனோட சிறப்பு அதிகாரியா இவரை நியமிச்சிருக்காங்க... இதுல ஏற்பட்ட வில்லங்கத்துலதான் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்கன்னு சொல்றாங்க...

''நான் எத்தனையோ விசாரணையை பார்த்துட்டேன். ஒரு மாவட்டத்துக்கு அதிகாரியா இருந்த என்னை ஒரு ஸ்கூலுக்குள்ள உக்கார வச்சு வேலை பார்க்க சொன்னாங்க... ஒரு உதவியாளர் கூட இல்லை. எதிரே ஒரு கூட்டமே இருக்குது... நான் என்ன பண்ண முடியும்ன்னு அவர் புலம்புனதா சக ஆபீசர்ஸ் சொல்றாங்க''

சித்ரா, தான் சேகரித்த தகவலைக் கொட்டினாள்.

சோதனை மேல் சோதனைபோதுமடா சாமி...



''சித்ராக்கா... தெற்கு உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகளோட வாகனங்களுக்குகே.வி.ஆர்., நகர் போலீசார் பூட்டு போட்டு அபராதம் விதிச்சாங்களாம். சந்தை திறக்கலைன்னா, சந்தைக்கு முன்னாடி நிறுத்தாம, எங்கு போய் வண்டிகளை நிறுத்திறது... வாகனங்களுக்கு பூட்டு போட்டது தப்பு; போராட்டம் நடத்துவோம்ன்னு விவசாயிகள் சொல்லியிருக்காங்க... வாகனங்களை கொடுத்துடுறோம். பைன் போட்டதை ஒன்னும் பண்ண முடியாதுன்னுட்டாங்களாம்.

''தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உழவர் சந்தை ஒட்டுமொத்த விவசாயிகளும் திரண்டதால, போலீசார் விவசாயிகளிடம் போன்ல சமாதானம் பேசியிருக்காங்க... இதனால போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவச்சுட்டாங்களாம்''

மித்ரா 'உச்' கொட்டினாள்.

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்நடப்பதையே நினைத்திருப்போம்



''மித்து... திருப்பூர்ல ஒரு கிளப்ல நடந்த சீட்டாட்ட வீடியோ வெளியாச்சுல்ல... அதுக்கப்புறம் அங்க போலீசார் ரெய்டு நடத்துனாங்க... 'எல்லா கிளப்களையும் கண்காணிக்கணும்'ன்னு கமிஷனர் ஸ்ட்ரிக்டா உத்தரவு போட்டுட்டாராம்.

''கிளப்ல இருந்து எப்படி வீடியோ வெளியாச்சுன்னு மெம்பர்ஸ் ஷாக் ஆயிட்டாங்களாம். அங்க இருக்கிற கோஷ்டி பூசலா அல்லது அரசியல் காரணமான்னு கிளப்புக்குள்ளேயே ஒரு விசாரணை போயிட்டிருக்கு''

''சித்ராக்கா... சிட்டில கன்ட்ரோல் ரூமுக்கு வந்திருக்கிற ஆபீசர் மேல ஏராளமான குற்றச்சாட்டு இருக்குதாம். போலீசாரோட குடும்ப சூழல் பத்தி புரிஞ்சுக்காம பணிச்சுமை கொடுக்குறதாவும், ஒருமைல கடுமையான வார்த்தைல பேசுறார்ன்னு குமுறுறாங்க... கீழே இருக்கிற போலீசாரை மிரட்டியும், மேல இருக்கிற ஆபீசரை கைக்குள் போட்டும் தனி ராஜாங்கமே நடத்துறாராம். கமிஷனர்தான் இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கணும்''

உத்தரவிடும் தொனியில் மித்ரா சொன்னாள்.

இருக்கும் இடத்தை விட்டுஇல்லாத இடம் தேடி



''மித்து... வீரபாண்டி ஸ்டேஷன்ல குற்றப்பிரிவுக்கு வந்துள்ள அதிகாரி, முன்பு சட்டம்-ஒழுங்குல இருந்தவரு... இப்ப அதே நினைப்பில, 'சட்டம்-ஒழுங்கு'ல மூக்கை நுழைக்கிறாராம்''

''சித்ராக்கா... காங்கயம் நகராட்சி மின் பணியாளர் 'நிலை 1'ல 'சேகரசந்திரன்' என்பவர் பணியாற்றி வந்திருக்காரு... இங்கு வந்து, சில மாதங்கள்தான் இருக்கும்... காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க., ஐ.டி., விங்கை சேர்ந்த நிர்வாகி, தன் மகனை இந்த இடத்துக்கு கொண்டு வர சில லகரங்களை வழங்கி, பவரை காட்டியிருக்காரு.

''ராசிபுரத்தில் பணியாற்றி வந்தவரை, காங்கயத்துக்கு மாத்திட்டு, இங்கிருந்தவரை அந்த ஊருக்கு மாத்திட்டாங்க. இதை கேள்வி பட்ட உள்ளூர் ஆளும்கட்சிகாரங்க, அமைச்சர் தொகுதில இப்படி நடந்திருக்கு... எப்படி ஆளும்கட்சிகாரனுக்கு மரியாதை இருக்கும்ன்னு புலம்பறாங்களாம்''

மித்து புன்னகைத்தாள்.

பொய்யான சில பேர்க்கு புது நாகரிகம்புரியாத பல பேர்க்கு இது நாகரிகம்



''மித்து... சிட்டில, குறுகலான தெருக்கள்ல கட்டட இடிபாடு, கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரும் சரக்குகள்னு குவிச்சு இடையூறு ஏற்படுது. தாராபுரம் ரோடு, குமரப்பபுரம் பகுதியில, குறுகலான வீதியில் பொருட்களைக் குவிச்சு ஆக்கிரமிச்சது தொடர்பா மாநகராட்சிக்கு புகார் தெரிவிச்சிருக்காங்க... இதுக்கு ''மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு நடந்ததாக புகார் தெரிவிக்கிறதால, போலீசில் புகார் கொடுத்து தீர்வு காணுங்க'ன்னு பதில் அளிச்சிருக்காங்க... இது எப்படி இருக்கு?'

''சித்ராக்கா... இதுதான் மாநகராட்சி கொடுக்கிற தீர்வா? நல்லா இருக்கு... நல்லா இருக்கு...

''பல்லடத்துல பட்டா மாறுதலுக்காக அலைஞ்ச 90 வயது மூதாட்டி சமீபத்துல இறந்துட்டாங்க... மூதாட்டிக்கு பல கோடி மதிப்புள்ள லேண்ட் இருக்காம். சில 'லகரம்' கொடுத்தாதான் பட்டா மாறுதல்ன்னு மண்டல ஆபீசர் கறாரா இருந்தாராம். கிராம அதிகாரியான 'லேடி'யும் இதுக்கு உடந்தையாம். இப்ப மூதாட்டியோட வாரிசுங்க கோர்ட் டைரக்ஷன் வாங்கீட்டாங்களாம். இப்ப என்ன 'ரிப்போர்ட் ' கொடுக்கறதுன்னு தெரியாம, 'பெரிய' அதிகாரியான அந்த 'சாமி' யோசிக்கிறாராம்''

''மித்து...கண்ணதாசன் சொல்ற மாதிரி, 'ஏன் இந்தக் கேள்வி-இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை'ங்கறது பொருத்தமான வரிகளா படுது''

ஆமோதித்தாள் மித்ரா.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமேஇருட்டினில் நீதி மறையட்டுமே



''மித்து... பல்லடத்துல மின் அதிகாரி, சீனியாரிட்டி படி இல்லாம துட்டு வாங்கீட்டு தனக்கு சாதகமான ஒருத்தருக்கு டிரான்ஸ்பர் போட்ருக்காரு. பாதிக்கப்பட்டவரு புகார் கொடுக்க இப்ப 'என்ன'சாமி' பண்றதுன்னு 'பழநி' முருகனை வேண்டுறாராம் அந்த அதிகாரி''

''சித்ராக்கா... திருப்பூர் சவுத்ல, புதுசா டாஸ்மாக் கடை திறக்கறதை தடுத்து நிறுத்திட்டாங்க... அந்தக் குடியிருப்பு பகுதியில தான், அ.தி.மு.க., வி.ஐ.பி., வீடு இருக்கிறதால, அவரு, மக்களோட ரோட்ல உட்கார்ந்து போராட்டத்துல ஈடுபட்டாரு... இதுனால, தி.மு.க., வி.ஐ.பி., தரப்பு டென்ஷன் ஆகிடுச்சு. அவங்களும் பொதுமக்களோட சேர்ந்து, போலீஸ் கமிஷனர், கலெக்டர்ட்ட மனு கொடுத்து, தங்கள் 'மக்கள் பணியை' பதிவு செஞ்சுட்டாங்கலாம்''

''சட்டசபைத் தேர்தல் நெருங்கறதால, திண்ணை பிரசாரத்தை வேகப்படுத்த அ.தி.மு.க., முடிவு செஞ்சிருக்காங்களாம். மாநகராட்சி வரி உயர்வு தொடர்பா மக்கள்ட்ட பேசி கவனத்தை ஈர்க்க, கட்சி தலைமை சிக்னல் கொடுத்திருச்சாம்...

''அதெல்லாம் சரிக்கா... சூடா இஞ்சி டீ போடறதுக்கான எந்த 'சிக்னலுமே' காணலையே...''

''மித்து... நீ சூடாவே பேசிட்டிருந்தேன்னா, எப்படி டீ போடறதாம்...''

புன்முறுவலுடன் சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...' என்ற கவிஞர் கண்ணதாசன் பாடல் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்தது.

Advertisement