குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது
சேலம், சேலத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட விவகாரத்தில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 44; சேலம், குகை பகுதியில் பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்கிறார். வேலையில் இருந்து நிற்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் வசூலித்த பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாக, செவ்வாய்பேட்டை போலீசில், பைனான்ஸ் உரிமையாளர் புகாரளித்தார். இதுகுறித்து மோகன்ராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது மொபைல்போனில், பச்சிளம் குழந்தைகள் போட்டோ அதிகம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் மோகன்ராஜ், அவரது மனைவி நாகசுதா, 38, பச்சிளம் குழந்தைகளை வாங்கி, விற்பனை செய்தது தெரியவந்தது. சில தினங்களுக்கு முன், ஈரோட்டிலிருந்து ஆண் குழந்தையை வாங்கி வந்து, இடைப்பாடியில் ஒரு தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. குழந்தையை விற்ற தாய், குழந்தையை வாங்கிய தம்பதியிடம் விசாரணை நடத்தி, குழந்தையை நேற்று முன்தினம் மீட்டனர். மோகன்ராஜ், மனைவி நாகசுதா, இவர்களுக்கு கூட்டாளிகளாக செயல்பட்டு வந்த, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஸ்ரீதேவி, 43, ஈரோடு பர்வீன் 42, பத்மாவதி,46, ஜனார்த்தனன் 38, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,'மோகன்ராஜ் ஒரு குழந்தையை, 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, 7 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். தொடர் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மீது, ஏற்கனவே பல்வேறு வழக்கு உள்ளது' என்றனர்.
மேலும்
-
ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்
-
ஈரானுக்கு ஏன் உதவவில்லை; காரணத்தை கூறுகிறார் புடின்
-
2,346 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அடுத்த மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை
-
இஸ்ரேல் - ஈரான் போரில் தலையிட்டதால் அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு சிக்கல்
-
பலாத்காரம் செய்ய முயன்ற பா.பி., நிர்வாகி
-
ஒரு போன் போதுமே....