துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ஆய்வு

ஆண்டிபட்டி:திம்மரசநாயக்கனூரில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதமானதால் தற்காலிகமாக நூலக கட்டிடத்தில் செயல்படுகிறது. புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்க எம்.பி.,தங்க தமிழ்ச்செல்வனிடம் இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் புதிய துணை சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

கதிர்நரசிங்கபுரம் கிழக்கு பகுதியில் உள்ள நாகலாறு ஓடையில் மழைக்காலத்தில் வரும் நீர் விவசாய நிலங்களில் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது. இப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்தும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ, பெருமாள் கோயில் அறங்காவலர் ராம்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் மகாராஜன், ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement