2 பவுன் நகை திருட்டு: வீட்டில் வேலை செய்தவரிடம் விசாரணை
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரண் 24. கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் சுவர்களுக்கு சுண்ணாம்பு அடிக்க கண்ணன் என்பவரிடம் கான்ட்ராக்ட் பேசியிருந்தார்.
எ.காமாட்சிபுரம் தெற்கு தெரு முருகன் 35. என்பவரை கண்ணன், சரண் வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினார்.
முருகன் வெள்ளையடிக்கும் போது, அவருக்கு காபி வாங்குவதற்கு சரண் டீக்கடைக்கு சென்று திரும்பினார்.
முருகன் வேலையை முடித்துவிட்டு சரணிடம் சொல்லாமல் கிளப்பியுள்ளார். சந்தேகமடைந்த சரண் பீரோவை திறந்து பார்த்த போது, அதிலிருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 2 பவுன் தங்கச்செயின் திருடுபோனது தெரிந்தது.
முருகன் தங்கச்செயினை திருடி சென்றதாக சரண் புகார் கொடுத்தார். வடகரை எஸ்.ஐ., ஜெகநாதன், முருகனிடம் விசாரணை செய்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement