உபரிநீர் திட்டத்தில் சில ஏரிகளை இணைக்க பா.ம.க., வலியுறுத்தல்

மேட்டூர், மேட்டூர் சட்டசபை தொகுதி, பா.ம.க., செயற்குழு கூட்டம், அதே பகுதியில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமை வகித்தார். அதில் மாதந்தோறும் ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து கூட்டம் நடத்த வேண்டும்; தொகுதியில் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்; மேச்சேரியில் எரகுண்டப்பட்டி ஏரி, புக்கம்பட்டி, காமனேரி ஏரிகளை, மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலர் துரைராஜ், மாநில இளைஞரணி செயலர் ராஜசேகரன், மேட்டூர் தொகுதி ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து, ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

குழப்பம்
நேற்று முன்தினம், சேலம் மேற்கு மாவட்ட செயலராக, கொளத்துார் அடுத்த வெடிக்காரனுாரை சேர்ந்த ராஜேந்திரனை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நியமித்தார். அன்றிரவே, மேற்கு மாவட்ட செயலராக சதாசிவமே நீடிப்பார் என, அன்புமணி அறிவித்தார். இந்நிலையில் நேற்று சதாசிவம் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். இருப்பினும் மேற்கு மாவட்ட செயலர் யார் என்பதில் குழப்பமாக உள்ளதாக, சில நிர்வாகி
கள் தெரிவித்தனர்.

Advertisement