மோசடி வழக்கில் 6 பேர் கைது

மதுரை : ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சத்யன் 36, பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
கடந்த 16.06.2021 ல் அவரது நண்பர் ராமநாதன் ஈரோடு சித்தோடு பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சரவணனை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவர் அவருக்கு தெரிந்த திருமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ராஜேஷ் 26 என்பவரிடம் ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு மடங்கு கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பி சத்யன் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜேஷ் வரச்சொன்னதன் பேரில் ரூ.4 லட்சம் பணத்துடன் ஆரப்பாளையம் ஏ.ஏ., ரோடு கால்வாய் கரை பகுதி அருகே சென்றார். அப்போது டூவீலரில் வேகமாக சென்ற மூவர் பணத்தை பறித்து தப்பினர். கரிமேடு போலீசார் விசாரித்தனர்.
இதில் ஈடுபட்டதாக திருமங்கலம் ராஜூ மகன் பிரசன்னா என்ற வசந்தகுமார் 28, திருமங்கலம் அரசபட்டி பாண்டி மகன் மணிகண்டன் என்ற ராஜேஷ் 26, விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் ராஜபாண்டி 46, திருமங்கலம் காமாட்சிநகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கார்த்திக் 28, பாண்டியன்நகர் தர்மர் மகன் முத்துராஜா 28, செங்குளம் கிழக்கு தெரு நல்லுராமன் மகன் முத்துப்பாண்டி 36 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
மேலும்
-
வாகனம் மோதி இளைஞர் பலி
-
கமுதியில் கடைகளுக்கு லாரியில் சரக்கு இறக்க நேரம் ஒதுக்க மக்கள் கோரிக்கை
-
தொண்டி வெள்ளை மணல் தெருவில் குடிநீர் தட்டுப்பாடு
-
குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா அமைச்சர் ஜமீர் அகமது கான் சவால்
-
பரமக்குடியில் ஓவர் லோடால் அடிக்கடி கரன்ட் கட் ஆகுதாம்; மின்வாரிய பதிலால் மக்கள் எரிச்சல்
-
சுப்புதேவன் வலசையில் கிணறு அமைத்து குடிநீர் எடுப்பு: தடுக்க மக்கள் வலியுறுத்தல்