திருப்பாலைவனத்தில் பராமரிப்பு இல்லாத ேபாலீஸ் குடியிருப்புகள்

பொன்னேரி,திருப்பாலைவனத்தில் ேபாலீஸ் குடியிருப்புகள் செடிகள் வளர்ந்தும், வர்ணம் மங்கியும், விரிசல்களுடன் பராமரிப்பு இன்றி உள்ளது.
பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பகுதியில், ேபாலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது.இங்கு, இரண்டு கட்டடங்களில் 18 குடியிருப்பகள் உள்ளன. இந்த கட்டடங்கள் உரிய பராமரிப்பு இன்றி உள்ளன.
சுவர்களில் செடிகள் வளர்ந்தும், ஆங்காங்கே விரிசல் அடைந்தும் உள்ளன. இவை கட்டப்பட்டு, 15 ஆண்டுகள் ஆன நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாமல் பலவீனமடைந்து வருகிறது.
குடியிருப்புகளில் உள்ள கதவு, ஜன்னல்கள சேதமடைந்தும், கதவுகள் துருப்பிடித்தும் உள்ளன. மின்சாதன பொருட்கள், குடிநீர் இணைப்புகளும் சேதமடைந்து பராமரிக்கப்படாமல் உள்ளன.
எனவே, போலீசாருக்கு பயன்படும் வகையில், ேபாலீஸ் குடியிருப்பு கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
கேரளாவில் மீண்டும் கனமழை வயநாட்டில் வெள்ளப்பெருக்கால் அச்சம்
-
யானைகள் வேட்டையை ஒழிக்க வேண்டும் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
-
சுங்கத்துறை ரோந்துப்படகு ராமேஸ்வரத்தில் வீணானது
-
அணு ஆயுத திட்டத்தை ஈரான் மீண்டும் துவக்கினால் தாக்குவோம்: அதிபர் டிரம்ப்
-
நியூயார்க் மேயர் தேர்தலில் திருப்பம்; வேட்பாளராக இந்திய வம்சாவளி தேர்வு
-
நீண்ட தூர அணு ஆயுத ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் பாகிஸ்தான்