கூலித்தொழிலாளி தற்கொலை

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வரஞ்சரம் அடுத்த சோமநாதபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராதாகிருஷ்ணன்,39; கூலித் தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல, வலி ஏற்பட்டவுடன் தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement