உள்வாங்கிய சாலையால் வியாபாரிக்கு பாதிப்பு

கோயம்பேடு,கோயம்பேடு முதல் வடபழனி, அசோக் நகர், கிண்டி ஆகிய பகுதிகளை இணைப்பது 100 அடி சாலை. நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ள சாலை, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே, கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கியது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் நாவல் பழங்களை வாங்கி, மூன்று சக்கர சைக்கிளில் வந்த வியாபாரி, அந்த பள்ளத்தில் நேற்று தடுமாறி விழுந்தார். அவர் வாங்கிய பழங்கள் தரையில் கொட்டின.
சாலை பள்ளத்தால், வியாபாரத்திற்காக செலவு செய்த பணம் மொத்தமும் வீணானதாக, அந்த வியாபாரி தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement