கனமழையால் வீடுகள் சேதம்

கூடலுார்: கேரளா இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மூன்றாவது முறையாக தீவிரமடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வண்டிப்பெரியாறு, பீர்மேடு, குமுளி பகுதிகளில் பலத்த காற்று ,மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன. இரவிலும் தொடர்ந்து கன மழை தொடர்ந்ததால் வீடுகள் இடிந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இரவில் வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
-
என்.பி.டி.,யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து; எச்சரிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
Advertisement
Advertisement