பள்ளி மாணவர்களுக்கான ஜூனியர் எறிபந்து போட்டி

ராஜபாளையம்:ராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு ஏறிபந்து கழகம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவு ஜூனியர் எறிபந்து போட்டிகள் பள்ளியில் தொடங்கியுள்ளது.
தாளாளர் கிருஷ்ணம ராஜூ வரவேற்றார். லீக் நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் சேலம், திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இருந்து 750 மாணவ மாணவியர் பங்கேற்று உள்ளனர்.
மூன்று நாள் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு தனித்தனியாக கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட உள்ளது. சிறப்பாக விளையாடும் மாணவர்கள் தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வீரர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை எஸ்.பி கண்ணன் தொடங்கி வைத்தார். மாரியம்மன் கோயிலில் தொடங்கி பள்ளியில் நிறைவு பெற்றது.
தமிழ்நாடு எறிபந்து கழக தலைவர் பால விநாயகம், மூத்த துணைத் தலைவர் அழகேசன், செயலர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.
மேலும்
-
சட்ட பல்கலை மாணவர்கள் போலீசாரை கண்டித்து பேரணி
-
மாநகராட்சி முறைகேடு55 பேருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
-
கூமாபட்டிக்கு போட்டியாக குருவித்துறை
-
'ஜி பே' பணம் அனுப்பியதில் ரூ.27.57 லட்சம் நுாதன மோசடி கணவன் , மனைவி கைது
-
மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை வரிகுறைப்பு முறைகேடு வழக்கு தீவிரம்: இதுவரை 8 பேர் கைது
-
மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை திறப்பு