பூஜாரிக ளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் பக்தர்கள் குழு சார்பில் கோயில் பூஜாரிகள் ஆகம விதிகளுக்கு எதிராக நடந்து வருவதை கண்டித்தும், பெரிய மாரியம்மன் பெயரில் தனி நபர்கள் நன்கொடை வசூலிப்பதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் பேசினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் விருதுநகர் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட நிதி செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement