ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்: புளுடூத் முறை கைரேகை, கருவிழி பதிவுகள் காரணமாக ஏற்படும் காலதாமதத்தால் பொருட்கள் வினியோகம் செய்வதில் மக்களின் கடும் அதிருப்தி அடைகின்றனர்.

இம்முறையால் ஏற்படும் சிரமங்களை களைய கோரி விருதுநகரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் கண்ணன், பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாார்.

Advertisement