மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி

திண்டுக்கல்,: திண்டுக்கல் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி திண்டுக்கல்லில் நடந்தது.
வித்யா பார்த்தி பள்ளியில் நேற்று 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் இருபாலருக்கும் இந்த போட்டி நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றன. பெண்கள் அணி, ஆண்கள் அணி என தனித்தனியாக பிரிக்கப்பட்டு லீக், நாக்அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.
ஆண்கள் அணி மற்ற அணிகளுடன் 7 முறையும், பெண்கள் அணி மற்ற அணிகளுடன் 3 முறையும் மோதின. 2 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் முதல் நாளான நேற்று பெண்கள் அணியினருக்கு இடையே போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பை, பதக்கம் , சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2-ம் நாளான இன்று ஆண்கள் அணிக்கு இறுதி போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். ஏற்பாடுகளை செயலாளர் வெங்கடேஷ், துணை செயலாளர் செந்தில், கென்னடி, தலைவர் ராஜகோபால் செய்தனர்
மேலும்
-
பட்ஜெட்டில் வராத கூடுதல் கடன்; குறைவாக வாங்கிய தமிழகம்
-
சட்ட பல்கலை மாணவர்கள் போலீசாரை கண்டித்து பேரணி
-
மாநகராட்சி முறைகேடு55 பேருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
-
கூமாபட்டிக்கு போட்டியாக குருவித்துறை
-
'ஜி பே' பணம் அனுப்பியதில் ரூ.27.57 லட்சம் நுாதன மோசடி கணவன் , மனைவி கைது
-
மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை வரிகுறைப்பு முறைகேடு வழக்கு தீவிரம்: இதுவரை 8 பேர் கைது