மதுரை மாணவர் ஒப்படைப்பு

கொடைரோடு: வீட்டை விட்டு வெளியேறிய மதுரை மாணவரை பெற்றோரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த 14 வயது சிறுவன் மதுரை ஏ.சி., மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். வீட்டில் பெற்றோர் திட்டியதால் பள்ளிக்கு செல்லாமல் பஸ் ஏறி கொடைரோடு வந்தவர் அங்குள்ள ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்திருந்தார்.

கொடைரோடு ரயில்வே போலீசார் மாணவரிடம் விசாரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement