பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வருவாரா: நாகேந்திரன் பதில்

திருநெல்வேலி : தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வெற்றி பெற்றது கிடையாது என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:



மதுரை முருகன் மாநாட்டில், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மாநாட்டில் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கவில்லை; தேர்தலுக்காகவும் நடத்தவில்லை.


பழனியில் அவர்கள் நடத்திய முருகன் மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொண்டனர் என மக்கள் அறிவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்; கடவுளை கல்லாக நினைத்து உடைப்பவர்கள்; பிற மதங்களை இழிவாக பேசுபவர்கள் மாநாடு நடத்தினால், முருகன் எப்படி அங்கு செல்வார்?


எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், தமிழகத்தில் 1989ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில்லை; அந்த வரலாறு மாறப்போவதில்லை. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என குடும்ப ஆட்சிக்கு மக்கள் ஓட்டளிக்க விரும்பவில்லை.



அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதில் இருந்தே, தோல்வி பயத்தில் தி.மு.க.,வினர் மாற்றி மாற்றி பேசி வருகின்றனர்.


தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி குறித்து அமித் ஷா, பழனிசாமி இருவரும் பேசி முடிவு செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

'தமிழக முதல்வர் பதவிக்கு, பழனிசாமி பெயரை அமித் ஷா கூறவில்லையே' என கேட்டபோது. ''கூட்டணி பேச்சின் போதே அதை அமித் ஷா தெரிவித்து விட்டார்,'' என நாகேந்திரன் பதிலளித்தார்.



இதுபோல, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருவாரா என்ற கேள்விக்கு, ''நல்லதே நடக்கும்,'' என நாகேந்திரன் கூறினார்.

Advertisement