பூண்டி - அரும்பாக்கம் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருவள்ளூர்:பூண்டியில் இருந்து அரும்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது அரும்பாக்கம். இந்த ஊராட்சியில், திருப்பேர், பங்காரம்பேட்டை மற்றும் அரும்பாக்கம் என, 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

கிராம மக்கள் கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட எவ்வித அவசர தேவைக்கும், பூண்டி வழியாக, திருவள்ளூர் வந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில், அரும்பாக்கம் அருகில், சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள், தடுமாறி பள்ளத்தில் தவறி விழுந்து விடுகின்றனர்.

இரவு நேரத்தில், வேகமாக வரும் வாகனங்கள், பள்ளம் இருப்பதை அறியாமல் விபத்திற்குள்ளாகி வருகிறது. எனவே, சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement