மேடவாக்கம் மேம்பாலத்திற்கு ரூ.1.85 கோடியில் அணுகு சாலை

மேடவாக்கம்,:தாம்பரம்- - வேளச்சேரி பிரதான சாலையில், மேடவாக்கம் பகுதியில், 2022ம் ஆண்டில் மேம்பாலம் திறக்கப்பட்டது. இப்பாலத்தின் இடதுபுறம் செல்லும் வகையில் அணுகு சாலை அமைக்கப்படவில்லை.
எனவே, தாம்பரத்திலிருந்து, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், சோழிங்கநல்லுார், சித்தாலப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், பாலத்தின் வலப்புற அணுகு சாலையை பயன்படுத்தி வந்தன.
அதனால், இப்பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் திடீரென வலது பக்கம் திரும்புவதால், வேளச்சேரி நோக்கி செல்லும் வாகனங்களோடு மோதி, அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் அளித்த தொடர் புகாரின்படி, பாலத்தின் இடதுபுறம் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அணுகுசாலை அமைக்க, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.
அதற்காக, வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, 1.85 கோடி ரூபாயில் 550 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலத்திற்கு, அணுகுசாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
இப்பணிகளை இரண்டு மாதங்களில் முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
2 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடங்களுடன் மறியல்
-
கொல்லிமலையில் 700 பேருக்கு வீடு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
-
ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் தார்ச்சாலையாக மாறாத அவலம்
-
மத்திய அரசு திட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு பயிற்சி
-
15 நாட்களாக குடிநீர் 'கட்' தில்லை நகர் மக்கள் அவதி
-
பவித்திரம் பஸ் ஸ்டாப் அருகே விபத்தை தடுக்க சிக்னல் தேவை