பவித்திரம் பஸ் ஸ்டாப் அருகே விபத்தை தடுக்க சிக்னல் தேவை
எருமப்பட்டி: பவித்திரம் பஸ் ஸ்டாப், எருமப்பட்டி பிரிவு சாலையில் விபத்தை தடுக்க சிக்னல் விளக்கு அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
எருமப்பட்டி யூனியனில் உள்ள பவித்திரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து எருமப்பட்டி செல்லும் சாலை மிக குறுகலாக இருந்ததால், சில ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த சாலையை விரிவுபடுத்தி, இரண்டு பக்கங்களிலும் சாலை அமைத்து, நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை நடுவே தடுப்பு இருக்கும் இடத்தில் எச்சரிக்கை விளக்கு அல்லது ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால், இரவில் துறையூரில் இருந்து அதிவேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகின்றன.
எனவே, இந்த சாலை நடுவே உள்ள தடுப்பு முன் வேகத்தடை அமைத்து, சிகப்பு நிற சிக்னல் அல்லது ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
136 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை