தேசிய எறிபந்து போட்டியில் காமராஜ் பள்ளி மாணவர் அசத்தல்

நம்பியூர் : தேசிய சப்- ஜூனியர் தேசிய எறிபந்து போட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது. இதில் தமிழக மிக இளையோர் எறிபந்து அணி மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தது.

தமிழக அணியில் நம்பியூர் காமராஜ் மேல்நிலைப் பள்ளி ஒன்பதா-ம் வகுப்பு மாணவர்கள் சித்தார்த், ஹரிஸ் இடம் பெற்றிருந்தனர்.


இருவருக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், பள்ளி தாளாளர் ஜவகர், செயலர் சுமதி ஜவகர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி
வாழ்த்தினர்.

Advertisement