பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
கோவை; புதுடில்லியில் நடந்த, 13வது பாஸ்போர்ட் சேவா நாள் விழாவில், வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, கோவையில் பணிபுரியும் இரண்டு பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
பாஸ்போர்ட் வழங்கும் பணிகளில், நல்ல செயல்திறனோடு சிறப்பாக பணிபுரிந்ததற்காக, உதவி கண்காணிப்பாளர் சங்கர், சிறந்த மானிய அதிகாரிக்கான விருதை பெற்றார்.
அதே போல், பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் குடிமக்களுக்கான சேவை நிர்வாகி மலர்விழி, பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு உதவுவதில் முன்னோடியாக விளங்கியதால், அவர் தொழில்முறை சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கான சிறந்த குடிமகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்துணவில் புழு, பூச்சி நெளிகிறது; உணவில் அலட்சியம் ஏன்? நயினார் ஆவேசம்
-
கேரளாவில் கொலை; தமிழக வனத்தில் சடலம் புதைப்பு; ஆர்.டி.ஓ., முன்னிலையில் தோண்டி எடுப்பு
-
பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி; ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்
-
ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் ஏமன் ஏவுகணைகள் தாக்குதல்; சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: அவமதிப்பு கூடாது என ஈரான் நிபந்தனை
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement