பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு  விருது

கோவை; புதுடில்லியில் நடந்த, 13வது பாஸ்போர்ட் சேவா நாள் விழாவில், வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, கோவையில் பணிபுரியும் இரண்டு பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

பாஸ்போர்ட் வழங்கும் பணிகளில், நல்ல செயல்திறனோடு சிறப்பாக பணிபுரிந்ததற்காக, உதவி கண்காணிப்பாளர் சங்கர், சிறந்த மானிய அதிகாரிக்கான விருதை பெற்றார்.

அதே போல், பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் குடிமக்களுக்கான சேவை நிர்வாகி மலர்விழி, பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு உதவுவதில் முன்னோடியாக விளங்கியதால், அவர் தொழில்முறை சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கான சிறந்த குடிமகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

Advertisement