யானையுடன் செல்பி... அச்சம் கிலோ எவ்ளோ?

சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே அரேபாளையத்தில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, நேற்று மாலை சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது சாலை வழியே சென்ற சிலர், அந்த யானைக்கு கரும்புகளை கொடுக்கவே, ரசித்து ருசித்து சாப்பிட்டது.


இதை தொடர்ந்து கார், பைக்குகளில் வந்த சிலர், இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று, யானையால் தாக்கப்படும் அச்சத்தை மறந்து, அதன் முன் நின்று செல்பி எடுத்தனர். அடுத்தடுத்து வந்தவர்களும் இந்தமோகத்தில் மூழ்க, சாலையில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்து, நெரிசல் ஏற்பட்டது.

Advertisement