கட்டுமான பொருள் கண்காட்சி துவக்கம்
ஈரோடு : பிசினஸ் இந்தியா எக்ஸ்சிபிஷன் நிறுவனம் சார்பில், கன்ஸ்ட்ரக்டிவ்-2025 கட்டுமான பொருட்கள், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அலங்கரிப்பு, ஹோம்டெக்கர்ஸ் மற்றும் பர்னிச்சர்களுக்கான மாபெரும் கண்காட்சி, ஈரோட்டில் பெருந்துறை சாலையில் பரிமளம் மஹாலில் நேற்று தொடங்கியது.
வீடுகள் கட்ட திட்டமிடுவோர், ஆர்க்கிடெக்ட், பில்டர்கள், இண்டீரியர் டெக்கரேட்டர், சிவில் மற்றும் ஸ்டக்ட்சுரல் என்ஜினியர், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கட்டுமான வல்லுனர்கள், பிராப்பர்ட்டி டெவலப்பர், காண்ட்ராக்டர்கள் மற்றும் கன்சல்டன்ட்கள் என ஆயிரக்கணக்கானோர் பார்வையிட உள்ளனர்.
கண்காட்சியில், பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம், 2.67 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற, வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்களின் ஆலோசனை, மக்களுக்கு கட்டுமான செலவை குறைப்பது பற்றிய ஆலோசனை, மிகமிக குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெறவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
தினமும் காலை, 10:30 மணிக்கு தொடங்கும் கண்காட்சி, இரவு, 8:30 மணி வரை இடைவெளியின்றி, நாளை வரை நடக்கிறது.
மேலும்
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது