வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: ''முதல்வரிடம் வி.சி.க.,வுக்கு எத்தனை சீட் கொடுப்பீர்கள் என்று கேளுங்கள்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. எங்கள் கூட்டணியை மட்டும் குறிவைத்து கேள்வி எழுப்புவது ஏன்? முதல்வரிடம் வி.சி.க.,வுக்கு எத்தனை சீட் கொடுப்பீர்கள் என்று கேளுங்கள். எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியில் எந்தவித முரண்பாடும் இல்லை. கருத்து வேறுபாடும் இல்லை.
தி.மு.க., கூட்டணியிலும் குழப்பங்கள் இருக்கிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸை, செல்வ பெருந்தகை முதல்வர் ஸ்டாலின் சொல்லி பார்த்தாரா என்று தெரியவில்லை. யுகத்தில் அடிப்படையில் பேச முடியாது. அரசியல் இல்லாமல் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
பிற்காலத்தில் அரசியலாக மாறலாம் அல்லது மாறாமல் போகலாம்.
என்னை பொறுத்தவரை ஒவ்வொரு மனதிலும் மாறுதல் வேண்டும். அப்போது தான் ஆட்சி மாற்றம் வரும். தினசரி பாலியல் பலாத்காரம் நடந்து கொண்டு இருக்கிறது. இதுதான் ஆன்மிக அரசியலா? தமிழகத்தில் பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.










மேலும்
-
காஷ்மீர் சிறப்பு சட்டம் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது:தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
-
கோப்பை வென்றது இலங்கை: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி
-
பட்டும் திருந்தாத பாகிஸ்தான்: இந்தியா தாக்கி அழித்த பயங்கரவாத முகாம்களை மீண்டும் அமைப்பது கண்டுபிடிப்பு
-
' ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்
-
70 வயது பெண் மருத்துவரிடம் சைபர் குற்றவாளிகள் ரூ.3 கோடி மோசடி
-
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி