'தள்ளிப்போட்ட காதலி... தாங்க முடியாத காதலன்'

ஈரோடு: ஈரோடு, திண்டல், புதுக்காலனியை சேர்ந்த நாகராஜ் மகன் சந்தோஷ், 24; எம்.காம்., - சி.ஏ., பட்டதாரி. தனியார் வங்கியில் பணிபுரிந்தார். கல்லுாரியில் படித்தபோது ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.


திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, 'படிப்பு முடிந்த பின் பார்த்து கொள்ளலாம்' என கூறியுள்ளார். கடந்த, 25ல் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், வீட்டருகே உள்ள தாத்தா வீட்டுக்கு துாங்க சென்றார். நேற்று முன்தினம் காலை எழுந்து வராததால் உள்ளே சென்று பார்த்தனர். அறையில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement