விடுதியில் 2 மாணவர் மாயம்

அந்தியூர்: அந்தியூரில் பவானி ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு விடுதியில் தங்கி, ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த, ௧௫ வயது மாணவன், பத்தாம் வகுப்பு படித்தார்.


இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், வேலகாளஹள்ளியை சேர்ந்த, ௧௬ வயது மாணவன், பிளஸ் ௧ படித்தார். இருவரும் நேற்று அதிகாலை, விடுதியில் இருந்து மாயமாகி விட்டனர். இதுகுறித்து விடுதி வார்டன் புகாரின்படி, மாயமான மாணவர்களை, அந்தியூர் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement