இனுங்கூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்.. நந்தவன பள்ளம் புற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் கிராம பெரியவர் ஏகாம்பர் தலைமையில் நடந்தது.
முன்னாள் பஞ்., தலைவர் பாலு, துணைத் தலைவர் செந்தில்குமார், யூனியன் பணி மேற்பார்வையாளர் ரங்கரத்தினம், யூனியன் டிப்டி மேலாளர் பிச்சைமணி, பஞ்.,செயலர் லெனின் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பாளராக மாவட்ட வள அலுவலர் அழகு முருகன் பங்கேற்று, திட்டத்தின் செயல்பாடுகள், பொது மக்களின் பயன்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து பேசினார்.
பஞ்., பணியாளர்களால் பராமரிக்கப்பட்ட பதிவேடுகளை, வட்டார வள அலுவலர் மகேஸ்வரி தலைமையிலான பணியாளர்கள் தணிக்கை செய்து, அதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து பொது மக்களிடம் எடுத்து விளக்கம் அளித்தனர். 100 நாள் திட்ட பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
* சிந்தலவாடி பஞ்சாயத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கான செயல்பாடுகள் குறித்து கடந்த, 23லிருந்து 26 வரை நடைபெற்ற சமூக தணிக்கையின் ஒப்புதல் பெறுவதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்ட பயனாளிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், கிருஷ்ணராயபுரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
136 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை