பழைய சேலம் சாலையில் தெரு விளக்குகள் தேவை
கரூர்: கரூர்-பழைய சேலம் விரிவாக்க சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-சேலம் பழைய சாலை, வாங்கப்பாளையம் பிரிவு, வெண்ணைமலை, செம்மடை வழியாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இணைகின்றன. இதனால், வாங்கப்பாளையம் பிரிவு முதல் சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை, சாலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் தொடங்கியது. தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், கரூர்-சேலம் பழைய சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய கரூர்-சேலம் பழைய, விரிவாக்க சாலையில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டியது அவசியம்.
மேலும்
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது