இரட்டிப்பு பண மோசடி வீட்டை மக்கள் முற்றுகை
மல்லசமுத்திரம்: இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி, பண மோசடி செய்த பெண்ணின் வீட்டை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மல்லசமுத்திரம் அருகே, பாலமேடு, ஹாஸ்டல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி, 47; தற்போது, மல்லசமுத்திரம், மோரிமேடு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், சேலம் மாவட்டத்தில், கடந்த, ஐந்தாண்டுகளாக சீட்டு கம்பெனி நடத்தி வந்தார். இதில், பல நபர்களிடம் இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணியளவில் பாதிப்படைந்த பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், மல்லசமுத்திரம் மோரிமேடு பகுதியில் உள்ள அவரது வாடகை வீட்டை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த எஸ்.ஐ., ரஞ்சித்குமார், பாதிக்கப்பட்ட பொதுமக்களை முறையாக புகாரளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
136 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை