தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்; மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு

கூடலுார்; கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை அருகே மரம் விழுந்து, மூன்று மாநிலங்கள் இடையே, இரண்டு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலுாரில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசிவருவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருகின்றன.
இந்நிலையில், கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை அருகே, நேற்று காலை, 6:30 மணிக்கு பெரியளவிலான மரம் விழுந்தது. இதனால், ஊட்டியில் இருந்து, கூடலுார், கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும், மூன்று மாநில அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன. கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், நடுவட்டம் பேரூராட்சி மீட்பு குழுவினர், தேசிய நெடுஞ்சாலை துறையினர் வந்து, மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து, 8:30 மணிக்கு வாகன போக்குவரத்து சீரானது.
மேலும்
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது