'தி.மு.க.,ஆட்சி முடியும் முன் வாக்குறுதி நிறைவேற்றணும்'

கோவை; தி.மு.க.,தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, தமிழகம் முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளை, ஒரு துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என, தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் மாநிலத்தலைவர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும், 38 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் பல்வேறு துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. ரேஷன் கடையில் பணிபுரிகின்ற பணியாளர்களின் வாக்குகளை பெற, கடந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் கீழ் இயங்கக்கூடிய ரேஷன்கடைகளை, ஒரே துறையாக கொண்டு வரப்படும் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. இப்போது ஆட்சி முடியும் தருவாயில், அளித்த வாங்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement