வி.சி.க., காங்கிரசுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? அன்புமணி சந்தேகம்

5

சென்னை: வி.சி.க., காங்கிரசுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.


சென்னை, சோழிங்கநல்லூரில், அன்புமணி தலைமையில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது அன்புமணி பேசியதாவது: வன்னி அரசு ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் ராமதாஸ் மீது திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது. செல்வப் பெருந்தகை ராமதாஸை சந்திப்பது, ராமதாஸை வி.சி.க.,வினர் புகழ்வது தி.மு.க.,வின் சூழ்ச்சி.

ராமதாஸ் குறித்து திடீரென வி.சி.க., தலைவர் திருமாவளவன் புகழ்ந்து பேசுவது ஏன்?
தி.மு.க., தான் பா.ம.க.,விற்கு ஒரே எதிரி, தி.மு.க.,விற்கு எதிராக பா.ம.க., சமூக ஊடகப் பிரிவு தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும். வி.சி.க., காங்கிரசுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? 5 வருடங்களாக ராமதாஸ், ராமதாஸாக இல்லை. அய்யா, அய்யாவாக இருந்து எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன்.



ராமதாசிற்கு பிறகு தான் பா.ம.க.,விற்கு தலைவராக வேண்டும் என்று நான் அப்போது முடிவெடுத்து இருந்தேன். ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார். அய்யா, அய்யாவாக இருந்து எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். 3 பேர் தங்கள் சுய லாபத்திற்காக ராமதாஸை பயன்படுத்திக் கொள்கின்றனர். ராமதாசிற்கு பிறகு தான் பா.ம.க.,விற்கு தலைவராக வேண்டும் என்று நான் அப்போது முடிவெடுத்து இருந்தேன். இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement