தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா கயிறுகள் பறிமுதல்: டில்லியில் 2 பேர் கைது

புதுடில்லி: டில்லியின் கம்லா மார்க்கெட் பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 1000 ரோல்களுக்கும் மேல் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா கயிறுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
டில்லியில் சீனாவின் மாஞ்சா கயிறுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சீனா மாஞ்சா கயிறால் ஒரு இளைஞர் முகம் வெட்டப்பட்டது மற்றும் நேற்று இரவு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகரில் நடத்தப்பட்ட சோதனையில் 1000 ரோல்களுக்கும் மேல் சீனா மாஞ்சா கயிறுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து டில்லியின் டி.சி.பி. விக்ரம் சிங் கூறியதாவது:
இன்று டில்லியின் குற்றப்பிரிவு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
தடைசெய்யப்பட்ட சீன மாஞ்சா விற்பனையைத் தடுக்க, டில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு இரண்டு வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தி மொத்தம் 1170 ரோல்களைக் கைப்பற்றியுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டனர்.வரவிருக்கும் சுதந்திர தினம் மற்றும் ரக்ஷாபந்தன் காரணமாக யாரும் உயிரிழக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விக்ரம் சிங் கூறினார்.

மேலும்
-
போலீசார் விசாரணையின் போது கோயில் ஊழியர் உயிரிழப்பு
-
சட்ட கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு
-
உலகின் முதன்மையான நாடு: இளைஞர்களுக்கு அமித் ஷா அழைப்பு
-
மாந்ரீகத்துக்காக நாயை கொன்று உடன் வசித்த பெண்: பெங்களூருவில் அதிர்ச்சி
-
வேலைக்காக கண்ணுக்கெட்டிய துாரம் வரை நீண்டது வரிசை; இங்கல்ல, கனடாவில்!
-
சைபர் கிரைம் ஒரு வகை நிழல் போர்;அதை தடுக்க நவீன உத்தி தேவை: சொல்கிறார் திரிபுரா முதல்வர்