கோப்பை வென்றது இலங்கை: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி

கொழும்பு: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அசத்திய இலங்கை அணி இன்னிங்ஸ், 78 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 1-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
இலங்கை சென்ற வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 247, இலங்கை 458 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 115/6 ரன் எடுத்திருந்தது. லிட்டன் தாஸ் (13) அவுட்டாகாமல் இருந்தார்.
நான்காம் நாள் ஆட்டத்தில் பிரபாத் ஜெயசூர்யா 'சுழலில்' லிட்டன் தாஸ் (14), நயீம் ஹசன் (5), தைஜுல் (6) சிக்கினர். தரிந்து ரத்நாயகே பந்தில் மெஹிதி ஹசன் மிராஸ் (11), எபாடட் ஹொசைன் (6) ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 133 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் சாய்த்தார்.
ஆட்ட நாயகன் (158 ரன்), தொடர் நாயகன் (369 ரன்) விருதுகளை இலங்கையின் பதும் நிசங்கா வென்றார்.
12வது முறை
'சுழலில்' அசத்திய இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் அரங்கில் 12வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்தார்.
21வது வெற்றி
கொழும்புவில் அசத்திய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் வங்கதேசத்துக்கு எதிராக 21வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை மோதிய 28 டெஸ்டில், இலங்கை 21, வங்கதேசம் ஒரு போட்டியில் வென்றன. ஆறு டெஸ்ட் 'டிரா' ஆனது.
@quote@
கொழும்பு டெஸ்ட் தோல்விக்கு பின், வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன் ஷான்டோ விலகினார். இவரது தலைமையிலான வங்கதேச அணி, 14 டெஸ்டில், 4 வெற்றி, ஒரு 'டிரா', 9 தோல்வியை பெற்றது. கடந்த ஆண்டு 'டி-20' அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய இவர், சமீபத்தில் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். quote
மேலும்
-
மாந்ரீகத்துக்காக நாயை கொன்று உடன் வசித்த பெண்: பெங்களூருவில் அதிர்ச்சி
-
வேலைக்காக கண்ணுக்கெட்டிய துாரம் வரை நீண்டது வரிசை; இங்கல்ல, கனடாவில்!
-
சைபர் கிரைம் ஒரு வகை நிழல் போர்;அதை தடுக்க நவீன உத்தி தேவை: சொல்கிறார் திரிபுரா முதல்வர்
-
ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகளாம்: சொல்கிறார் சீமான்
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் மோடியுடன் உரையாடிய சுபான்ஷூ சுக்லா!
-
மரக்கிளை முறிந்து மாணவன் பரிதாப மரணம்