ரேவதி கல்வி நிறுவனங்களில்மாணவர் சேர்க்கை மும்முரம்
திருப்பூர், : திருப்பூர், ரேவதி கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
ரேவதி ஆக்குபேஷனல் தெரபி கல்லுாரியில், பி.ஓ.டி., இளங்கலை நான்கரை ஆண்டு பட்டப்படிப்பு; ரேவதி பிசியோதெரபி கல்லுாரியில்,பி.பி.டி., இளங்கலை நான்கரை ஆண்டு பட்டப்படிப்பு உள்ளன.
ரேவதி செவிலியர் கல்லுாரியில் எம்.எஸ்.சி., நர்சிங் (முதுகலை) பட்டப் படிப்பு: பி.எஸ்.சி., நர்சிங் முடித்தோர், இதில் இணையலாம்.
பி.எஸ்.சி., நர்சிங் பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ரேவதி பாரா மெடிக்கல் அறிவியல் கல்லுாரியில் நான்காண்டு அலய்டு ஹெல்த் சயின்ஸ் பாடப் பிரிவு. கார்டியோ பல்மனரி பெர்பியூஷன்; ரெஸ்பிரேட்டரி தெரபி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் உள்ளன.
எம்.எச்.ஏ., என்னும் முதுகலை பட்டப்படிப்பு மருத்துவமனை நிர்வாகம் இரண்டாண்டு உள்ளிட்ட பல்வேறு இளம் மற்றும் முதுகலை படிப்புகளுக்கு தற்போது மாணவர் சேர்க்கை நடக்கிறது.
ரேவதி கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான ரேவதி மெடிக்கல் சென்டர், தேசிய தரச் சான்றிதழ் பெற்றுமுதன்மை மருத்துவமனையாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு ரேவதி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மருத்துவத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 'அனைத்து படிப்புகள் வாயிலாக வேலைவாய்ப்புகளை எளிதாக பெற முடியும்'' என்று ரேவதி கல்வி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு, 98422 02288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.