கால் உடைந்த பசுவுக்கு சிகிச்சை

சென்னை, பல்லாவரம் அடுத்த பம்மலைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்; பால் வியாபாரி. இவரது பசு மாடுக்கு காதில் பிரச்னை இருந்தது. இதற்கு சிகிச்சை அளிக்க, பம்மலில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கிருந்த மருத்துவர், பசு மாட்டிற்கு சிகிச்சை அளிக்காமல், அதன் கால்களை உடைத்து திருப்பியதாக ராஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். இது குறித்து, நம் நாளிதழில், இம்மாதம் 25ம் தேதி படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து, கால் உடைந்த பசுவுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கால்நடைத் துறை அரசு செயலர் சுப்பையன், கடந்த 26ம் தேதி உத்தரவிட்டார். தொடர்ந்து, ராஜேந்திரன் வீட்டுக்கு, அரசு கால்நடை ஆம்புலன்ஸ் நேற்று முன் தினம் அனுப்பி வைக்கப்பட்டு, வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. தொடர்ந்து, அம்மருத்துவமனையில் பசு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement