அமர்நாத் யாத்ரீகர்களுக்கு முன்னேற்பாடு: காஷ்மீர் துணை நிலை கவர்னர் பெருமிதம்

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக, யாத்ரீகர்களின் வசதிக்காக சிறப்பான முன்னேற்பாடு செய்யப்பட்டது என்று ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பெருமிதம் தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் 2025ம் ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக நடைபெற்று முன்னேற்பாடுகள் குறித்து,பொதுமக்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஒரு மாதமாக, அமர்நாத் யாத்திரைக்கு வரவிருக்கும் யாத்ரீகர்களின் வசதிக்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சவாலான வானிலை இருந்தபோதிலும், யாத்ரீகர்களுக்கு சிறந்த வசதிகளை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உங்களில் பலர் இதை அறிந்திருப்பீர்கள். மாநிலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மக்கள், குறிப்பாக இந்த யாத்திரையில் ஈடுபட்டுள்ளவர்கள், அர்ப்பணிப்புடன் சேவை செய்துள்ளனர் என்பதையும் நான் நன்கு அறிந்துள்ளேன்.
இவ்வாறு மனோஜ் சின்ஹா பேசினார்.
மேலும்
-
விண்வெளி நாயகன் சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்
-
ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டால் தமிழகம் சுடுகாடாகும்: நாகேந்திரன்
-
பத்ம விருது பெற்ற சாமியார் மீது இளம் பெண் பாலியல் புகார்
-
நிர்வாகிகள் அறிவிப்பில் இழுபறி: தள்ளாடும் காங்.,
-
அடிக்கடி சேதமாகும் சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்
-
'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி