அடிக்கடி சேதமாகும் சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள இணைப்பு சாலை, அடிக்கடி சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலைகள் உள்ளன. ஆந்திரா மார்க்கத்தில் உள்ள இணைப்பு சாலை வழியாக, தினமும் 100க்கும் மேற்பட்ட நிலக்கரி லாரிகள் கடந்து செல்வதால், பாரம் தாங்காமல் அடிக்கடி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிடும்.
இச்சாலை வழியாக தாசில்தார் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், சார் கருவூலத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது, இச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அவ்வழியாக கடந்து செல்லும் நிலக்கரி லாரிகளின் பாரத்திற்கு ஏற்ப சாலையை புதுப்பிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
'பா.ஜ., -அ.தி.மு.க., கூட்டணி 101 சதவீதம் வெற்றி பெறும்'
-
போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்படுத்தி தி.மு.க., - எம்.பி.,யின் மகன் தில்லுமுல்லு
-
கூட்டுறவு கடன் சங்கங்கள் மீது நம்பிக்கை போச்சு! 150 உறுப்பினர்களின் பல கோடி ரூபாய் டிபாசிட் அம்போ
-
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு நீட்டிப்பு
-
எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் இரண்டு மணி நேரம் தாமதம்
-
ரூ.3 கோடி கடனுக்காக பால்பண்ணைக்கு 'சீல்' உரிமையாளர் தற்கொலை