ஏ.வி.பி, கல்லுாரியில் 'சங்கமம் - 2025'

திருப்பூர் : திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவியர் வரவேற்பு நிகழ்ச்சி'சங்கமம்-2025' நடந்தது.

ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதல்வர் கதிரேசன் வரவேற்றார். செயலாளர் லதா கார்த்திகேயன் பாராட்டுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முனைவர் ஜெகன், மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்துறை தலைவர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement