ஜூலை 5, 6ல் ஈரோடு, நாமக்கல், சேலத்தில் 'காலைக்கதிர்' இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி

சேலம், காலைக்கதிர் 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி' நிகழ்ச்சி, வரும் ஜூலை 5, 6ம் தேதிகளில் ஈரோடு, நாமக்கல், சேலத்தில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில், 440க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 2 லட்சம் சீட்கள், தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில், 2 லட்சம் சீட்களுக்கு, 2.41 லட்சம் பேர் போட்டி போட உள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜூலை 7 ல் கவுன்சிலிங் துவங்க உள்ளது. முழுவதும் ஆன்லைன் முறையில் நடக்கும் கவுன்சிலிங்கில், மாணவர்கள் வழங்கும் சாய்ஸ் லிஸ்ட் அடிப்படையில், கல்லுாரிகளில் இடம் ஒதுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு, போட்டி அதிகரித்துள்ள நிலையில், சாய்ஸ் லிஸ்ட் தயாரிப்பதில்,
மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, தெளிவான வழிகாட்டுதலை வழங்கி, வளமான எதிர்காலத்தை ஏற்படுத்த, ஆண்டுதோறும் காலைக்கதிர் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்காக, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியுடன் இணைந்து, ஜூலை 5, காலை 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, ஈரோடு, சத்தி ரோட்டில் உள்ள ரத்னா ரெசிடென்சியிலும், மதியம், 2:00 முதல் மாலை, 6:00 மணி வரை நாமக்கல், பரமத்திரோடு எஸ்.பி.எஸ்., திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது.
ஜூலை 6, காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, சேலம், சி.ஜெ.பிளாசியோ ஹோட்டலிலும் நடக்கிறது. இதில், கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா, இந்த ஆண்டு உங்கள், 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு எந்த கல்லுாரியில் கிடைக்க வாய்ப்புள்ளது, நவீன தொழில்நுட்ப படிப்புகளின் எதிர்காலம், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து வித சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார்.
மேலும், ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கம், சரியான சாய்ஸ் பில்லிங் பதிவிடுவதற்கான வழிமுறை, புரொவிஷனல் அலாட்மென்ட் பெறுதல், இந்தாண்டு கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட கவுன்சிலிங் குறித்த அனைத்து தகவல்களுக்கும், நேரடி விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு 'கோஸ்பான்சர்'களாக கோவை கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ், ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 98940 09144 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கவுன்சிலிங் நடைமுறைகளை தெளிவாக தெரிந்து, சரியான முடிவெடுக்க உதவும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, மாணவர்கள், பெற்றோரை காலைக்கதிர் அன்புடன் அழைக்கிறது. அனுமதி இலவசம்.

Advertisement