செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஹவாலா பணம் 30,000 பறிமுதல்
செங்கம்,:செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில், கணக்கில் வராத, 30,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சார்பதிவாளர் சிவசங்கரன். பத்திர பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் கேட்பதாக, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது. அதன்படி, இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை, அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனை இரவு, 11:00 மணி வரை நடந்தது. அப்போது கணக்கில் வராத, 30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், பத்திரப்பதிவு செய்த ஆவணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்காமல் இருந்தது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்படுத்தி தி.மு.க., - எம்.பி.,யின் மகன் தில்லுமுல்லு
-
கூட்டுறவு கடன் சங்கங்கள் மீது நம்பிக்கை போச்சு! 150 உறுப்பினர்களின் பல கோடி ரூபாய் டிபாசிட் அம்போ
-
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு நீட்டிப்பு
-
எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் இரண்டு மணி நேரம் தாமதம்
-
ரூ.3 கோடி கடனுக்காக பால்பண்ணைக்கு 'சீல்' உரிமையாளர் தற்கொலை
-
மருத்துவ பூச்சியியல் ஆய்வு மையம் ஆராய்ச்சியாளர்களை அதிகரிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Advertisement
Advertisement