ராஜஸ்தானில் சோகம்; மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர் 4 பேர் பலி; 5 பேர் மாயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குழாய் பதிக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 5 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில் குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். சில தொழிலாளர்கள் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்ததில் சிக்கி கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 6 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 5 பேர் மாயம் ஆகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்
-
குடும்பத்தை குலைத்தவர்; பார்லியில் டிஸ்மிஸ் ஆனவர்: மஹ்வா மொய்த்ரா மீது சக திரிணாமுல் எம்.பி., கடும் விமர்சனம்!
-
கோவில் ஊழியர் மரணம்: போலீசார் மீது கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்
-
பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி
-
பைனலில் ஆயுஷ், தான்வி சர்மா: யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்
-
காலிறுதிக்கு முன்னேறியது செல்சி: கிளப் உலக கால்பந்தில்
-
போலீசால் மட்டும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது: ம.பி., டி.ஜி.பி.,