ஒடிசா ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி; 50 பேர் காயம்

புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று முன்தினம் (ஜூன் 27) கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம் ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில், 3வது நாளான இன்று (ஜூன் 29) அதிகாலை 4:30 மணியளவில் ஸ்ரீ கண்டிச்சா கோவிலுக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக கூடி இருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 50 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக புரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இறந்தவர்கள் பிரபாதி தாஸ் மற்றும் பசந்தி சாஹு ஆகிய இரண்டு பெண்கள் மற்றும் பிரேமகாந்த் மஹந்தி என்ற 70 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ரத யாத்திரையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (6)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29 ஜூன்,2025 - 12:21 Report Abuse

0
0
Reply
Naga Subramanian - Kolkatta,இந்தியா
29 ஜூன்,2025 - 11:57 Report Abuse

0
0
Reply
அசோகன் - ,
29 ஜூன்,2025 - 10:56 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
29 ஜூன்,2025 - 10:24 Report Abuse

0
0
Reply
பிரேம்ஜி - ,
29 ஜூன்,2025 - 10:14 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
29 ஜூன்,2025 - 09:52 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு இல்லை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை குற்றச்சாட்டு
-
2030ல் கோவையின் ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும்; ஐ.டி.எப்., அளிக்கிறது நம்பிக்கை
-
ராஜஸ்தானில் சோகம்; மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர் 4 பேர் பலி; 5 பேர் மாயம்
-
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்: எமர்ஜென்சி பற்றி 'மன் கி பாத்' உரையில் மோடி காட்டம்
-
இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை
-
பாரிசில் புகைத்தால் ரூ.13,000 அபராதம்
Advertisement
Advertisement