அசோக் நகர் வாலிபர் கொலை வழக்கில் மாமியாரும் கைது
அசோக் நகர்:அசோக் நகர் வாலிபர் கொலை வழக்கில், மனைவி சரணடைந்த நிலையில் மாமியாரையும் போலீசார் கைது செய்தனர்.
அசோக் நகர் 7வது அவென்யூவைச் சேர்ந்தவர் கலையரசன், 23. இவரது மனைவி அசோக் நகர் புதுார் 13வது தெருவைச் சேர்ந்த தமிழரசி.
இருவரும் குடும்ப பிரச்னை காரணமாக, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தமிழரசிக்கு, சக்திவேல், 20, சஞ்சய், 18, என இரு சகோதரர்கள் உள்ளனர்.
கடந்தாண்டு செப்., மாதம் தமிழரசியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், கலையரசன், மைத்துனர் சக்திவேலை வெட்டினார். காயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதற்கு பழிதீர்க்கும் வகையில், கடந்த 15ம் தேதி கலையரசனை, சஞ்சய், சக்திவேல் மற்றும் அவரது நண்பர் சுனில்குமார், 20, ஆகியோர் சரமாரியாக வெட்டினர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலையரசன், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று மதியம் உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். கலையரசனை வெட்டிய மைத்துனர்கள் சஞ்சய், சக்திவேல் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், கலையரசன் மனைவி தமிழரசி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில், கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் தலைமறைவாக இருந்த தமிழரசியின் தாய் சத்யாவை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்