பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணியை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.2 கோடியே 51 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில், 12 அறைகள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்த பணியை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகள் துவங்கப்பட்ட விவரம், கட்டுமான பணிகள், பொருட்களின் தரம், திட்ட விதிமுறைகளில் உள்ளவாறு பணிகள் நடக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கட்டட பணிகளை தரமாகவும், உடனடியாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
இதேபோல, உளுந்துார்பேட்டை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.4 கோடியே 94 லட்சம் மதிப்பில் கட்டப்படும் வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும், அவர் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
மேலும்
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்